அழியாச்சுடர்கள்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  நினைவில் ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Tamil #Eelam #ltte

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவில் !

தேசத்தின் குரல் தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு – தேசியத் தலைவரின் அறிக்கை

எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக்கு அதிகம் நெடுத்து கூடிக்குறைந்து செல்கிறது. துரதிஸ்டவசமாக, பாலாண்ணையினது வாழ்வு இடைநடுவில் நின்றுபோய்விட்டது. தீவிரம்பெற்றுள்ள எமது விடுதலைப்போருக்கு அவர் நிறையப் பணிகளை ஆற்றவேண்டியிருக்கின்ற தருணத்தில் அவருக்கு மரணம் சம்பவித்திருக்கிறது. இதனை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. என் உள்ளத்தை உடைத்து, நெஞ்சத்தைப் பிளக்கிறது. கட்டுக்கடங்காத காட்டாறு போல சீறிப்பாயும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தை என்னால் வார்த்தைகளால் கொட்டமுடியாது. மனித மொழியில் இதற்கு இடமுமில்லை.





திசெம்பர் 13, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், வீரவணக்கம் | , , , , , | தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  நினைவில் ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Tamil #Eelam #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா, எங்கள் காட்டில் புலிதான் ராஜா ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #AntonBalasingam #Tamil #Eelam #ltte


எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா! (தேசத்தின் குரல் ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் லண்டன் பேட்டி)

‘ஒரு முறை தலைவர் பிரபாகரன் என்னிடம் சொன்னார்… ‘ஓய்வென்பது நமக்கு மரணத்தில்தான் சாத்தியம்!’ என்று. அதுதான் சத்தியம்!’’

வசந்த காலத்தின் கைகளைக் குலுக்கி விடைபெறுகிறது குளிர்காலம். தெற்கு லண்டனில், மனைவி அடேல் பாலசிங்கத்துடன் எளிமையாக வாழ்கிறார் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகரான ஆண்டன் பாலசிங்கம்!

சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு என உடலைத் துன்புறுத்தும் நோய் களுக்கிடையிலும், ஓயாத உழைப்பு, ஓய்வில்லாத பயணங்கள், இயக்கப் பணிகள் என உற்சாகமாக இருக்கிறார் தமிழ் ஈழத்தின் “சிந்தனைச் சுரங்கம்”!

விடுதலைப் புலிகள் இயக்கத்துடனான தனது பிணைப்பு பற்றிப் பேச ஆரம்பித்தார் ஆண்டன் பாலசிங்கம்…

எழுபத்தெட்டாம் வருடம்… லண்டன் பல்கலைக் கழகத்தின் பேராசிரியராக இருந்தபோதுதான், முதன்முறையாக அடேலைச் சந்தித்தேன். ஒருமித்த கருத்துடைய நாங்கள் பல்வேறு அரசியல் இயக்கங்களில் பங்குபெற ஆரம்பித்தோம். தென்னாப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஜிம்பாப்வே போன்ற நாடுகளின் விடுதலைக்கு ஆதரவான போராட்டங்களிலும், அமெரிக்கக் காலனி ஏகாதிபத்தியத்துக்கு எதிரா கவும் தீவிரமாகப் போராடி வந்தோம். இந்த நிலைமையில்தான், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தின் தலைவர் பிரபாகரன் என்னைத் தொடர்பு கொண்டார். உலகிலுள்ள பல்வேறு ‘கெரில்ல’ விடுதலைப் போராட்டங் களைப் பற்றியும், அவற்றின் வரலாறுகளையும் தமிழில் மொழி பெயர்த்துத் தரும்படி கேட்டார். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த அழைப்பு விடுத்தார். நான் முதன்முதலாக பிரபாகரனை சென்னையில்தான் சந்தித்தேன். அதன் பிறகு, வருடந்தோறும் சென்னைக்கு வந்து சில மாதங்கள் தங்கி, போராளி களுக்கு அரசியல் பயிற்சி வகுப்புகள் நடத்த ஆரம்பித் தேன். அப்படி ஆரம்பித்தது எங்கள் நட்பு!

இத்தனை வருட உறவில், எனக்கும் பிரபாகரனுக்கும் கருத்து வேறுபாடுகள் வந்திருக்கின்றன. ஆனால், எங்களுக் கிடையிலான நல்லுறவில் எப்போதும் பாதிப்பு ஏற்பட்டதில்லை. காரணம், நாங்கள் மிகச் சிறந்த நண்பர்கள்.



விடுதலைப் புலிகளின் சிந்தனை வடிவம், லட்சியம், அரசியல் கொள்கை ஆகியவற்றை வகுத்துக் கொடுத்தது நான்தான். ஆனால், போரியல் ரீதியான வளர்ச்சியில் இந்த இயக் கத்தை நெறிப்படுத்தித் திட்டமிட்டு, ஆயுதப் போராட்டத்தின் தந்தையாக விளங்குபவர் பிரபாகரன். என்னுடைய அரசியலும், அவரது போரியலும் இணைந்துதான் எமது விடுதலைப் போராட்டம் முன்னெடுத்துச் செல்லப் படுகிறது. தலைவர் என்கிற ரீதியில் அவருக்குதான் நாங்கள் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் கொடுக் கிறோம்.

இந்த இயக்கத்தில் நான் ஒரு தொண்டன். எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா. ஆனால், எங்கள் காட்டில் புலிதான் ராஜா!’’ என்கிறார் அழகான சிரிப்புடன்.

கேள்விகளை முன்வைக்கிறோம். சில கேள்விகளுக்குச் சிரிக்கிறார். சில கேள்விகளைத் தவிர்க்கிறார். ஆனால் எது குறித்துப் பேசினாலும், அதன் வரலாறும், அது தொடர்பான புள்ளிவிவரங்களும் கொட்டுகின்றன

“”முதன்முதலாக விடுதலைப் புலிகளை ஒரு போராளி அமைப்பாக அங்கீகரித்ததோடு, ஈழப் பிரச்னையில் பேச்சுவார்த்தைகளைத் துவக்கி வைத்த இந்தியா, தற்போது ஈழப் பிரச்னையிலிருந்து விலகி இருப்ப தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்?””

“”புலிகள் இயக்கத்தின் தோற்றத்துக்கு முன்பிருந்தே இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் மீது அனுதாபமும் கருணையும் காட்டி வந்துள்ளது. அதற்குக் காரணம், ஈழத்தில் இருந்தாலும் இன ரீதியாக நாங்கள் இந்தியர்கள்தான்! எங்களது மூல வரலாறு இந்தியாவிலிருந்துதான் ஆரம்பமாகிறது.

எண்பத்து மூன்றாம் வருடம், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ஒரு மிகப் பெரிய வன்முறை கட்ட விழ்த்துவிடப்பட்டு, பல்லாயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப் பட்டனர். உடைமைகள் சேதப்படுத்தப் பட்டன. அது தமிழ்நாட்டில் பெருங் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஆர்ப் பாட்டங்களின் மூலமும், பேரணிகள் மூலமும் தமிழக மக்கள் தங்கள் ஈழத் தமிழர் ஆதரவு உணர்ச்சிகளைக் காட்டினார்கள். அப்போதுதான், ஈழத் தமிழர் பிரச்னை என்பது ஏதோ இலங்கைத் தீவுக்குள் அடங்கும் பிரச்னை அல்ல; அதன் விளைவுகள் இந்தியாவின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற உண்மையை உலகம் உணர்ந்தது.

அதன் பிறகு, இந்திய அரசு ஈழத் தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையிட ஆரம்பித்தது. இந்தச் சூழ்நிலையில்தான், ஈழத் தமிழர் பாதுகாப்புக்கு ஒரு கவசமாக எமது விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், வேறு சில போராளிக் குழுக்களுக்கும் ஆயுதம் கொடுத்து, ராணுவப் பயிற்சி கொடுத்து எங்களை வளர்த்தது இந்தியா. இது வரலாற்று உண்மை!

அதை நாங்கள் எப்போதும் மறந்ததில்லை. இப்படியாக எங்களுக்குப் பேருதவிகள் செய்து, எங்களை ஒரு விடுதலை அமைப்பாக அங்கீகாரம் செய்து, திம்பு பேச்சு வார்த்தையில் பங்கு பெறச் செய்ததும் இந்தியாதான். அதன் பிறகு பல்வேறு காரணங்களால், இந்திய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சில முரண்பாடுகள் எழுந்தன (இந்த இடத்தில், கவனத்தோடு சில கடந்த கால நிகழ்வுகளைத் தவிர்க்கிறார்).

அதனால், இடைவெளிகள் தோன்றின. சில மனக் கசப்பான சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனாலும், ஒட்டுமொத்தமாகச் சொல்லும்போது, இந்தியா அன்றிலிருந்து இன்றுவரை எப்போதுமே ஈழத் தமிழர்கள்பால் அனுதாபத்தோடுதான் நடந்து வருகிறது. இந்த நிலை தொடர வேண்டும், ஈழத் தமிழர்களின் நியாயமான உணர்வுகளை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்பதே எம் விருப்பம்.””

“”இந்தியா & புலிகள் உறவில் முரண்பாடு ஏற்பட முக்கியமாக என்ன காரணம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?””

“”தமிழீழம் சுதந்திர நாடாக உருவாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது விடுதலைப் புலிகள் இயக்கம். சிங்களப் பேரினவாதிகளிடம் இருந்து எம் மக்களுக்கு எந்த நியாயமும் கிடைக் காது என்று நாங்கள் உறுதியாக நம்பி னோம். அதனால் தான் எம் மண்ணை மீட்டெடுத்து, எமக்கான சுதந்திரத் தமிழீழத்தை உருவாக்குவதில் தெளிவாக இருந் தோம். ஆனால், இந்திய அரசு இதை விரும்பவில்லை.

தமிழீழத்தில் ஒரு தனியரசு உருவானால், அது தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற சமூகங்களிடத்திலும் பிரிவினை எண்ணத்தைத் தோற்று விக்கும் என்ற அச்சத்தினால், எமது லட்சியத்தை அவர்கள் ஏற்க மறுத் தார்கள். இந்த அடிப்படையில்தான் முரண்பாடு எழுந்தது.””

“”தற்போது இந்திய அரசின் அணுகுமுறையில் மாற்றம் வரும் என்று நினைக்கிறீர்களா?””

“”இந்தியா நேரடியாக இந்தப் பிரச்னையில் ராணுவ ரீதியாகத் தலையிட்டு, புலிகளுக்கு எதிராக ஒரு பெரும் ராணுவ நடவடிக்கையை எடுத்துப் பெரும் தோல்வியைத்தான் சந்தித்தது. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய ராணுவத்தால் நசுக்க முடியவில்லை. மற்றபடி புலிகள் இயக்கம், இந்தியாவைப் பகைத்துக் கொள்ள விரும்பியதில்லை. எங்களுக்கு எதிராக யுத்தம் திணிக்கப்பட்ட காரணத்தால்தான் எதிர்த்துப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டோமே தவிர, நாங்கள் இந்தியாவுக்கு எதிராக ஆயுதங் களைத் தூக்குவதற்கு ஒருபோதும் விரும்பியதில்லை.

ஏனென்றால், தமிழீழத்தைத் தாய்நாடாகப் பார்க்கும் நாங்கள், இந்தியாவைத் தந்தை நாடாகத்தான் எப்போதும் பார்த்துக்கொண்டிருக் கிறோம். புலிகளுக்கும் இந்திய அரசுக்கும் மத்தியில் நல்ல நட்புறவு ஏற்பட வேண்டும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். அப்படியான ஒரு சூழ்நிலை நிச்சயம் விரைவில் ஏற்படும் என்பதுதான் எனது கருத்து.””

“”ஈழப் போராட்டத்தில், உங்களது பங்களிப்பில் நெகிழ வைத்த தருணம் என்று எதைக் கருதுகிறீர்கள்?””

“”இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நடைபெற்ற துயரச் சம்பவம்தான் என் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.

எண்பத்தேழாம் வருடம், அக்டோபர் இரண்டாம் தேதி பருத்தித்துறை கடற்பகுதியில் வைத்து குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட பதினைந்து முக்கியப் போராளிகள் ஸ்ரீலங்கா கடற்படையினரால் நிராயுதபாணி களாகக் கைது செய்யப்பட்டு, பலாலி ராணுவ முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தார்கள். இந்திய அரசுடனும், இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடமும் பேசி அவர்களை விடுவிக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டு இருந்தது.

நான் இந்தியத் தூதரிடம் பேசியபோது, இலங்கை ராணுவத்துடன் பேசி அவர்களை விடுதலை செய்து விடலாம் என்று நம்பிக்கை தெரி வித்தார். நான் பலாலி ராணுவ முகாமில், சிங்கள ராணுவத்தின் வசமிருந்த எம் போராளிகளை இந்திய அமைதிப்படை அதிகாரிகளின் உதவியுடன் சந்தித்தேன். எம் போராளிகள் அங்கு குற்றவாளிகளைப் போலத் தரையில் உட்கார வைக்கப்பட்டிருக்க, அவர்களை நோக்கித் துப்பாக்கி முனைகளைத் திருப்பியவாறு சிங்கள ராணுவத்தினர் நின்றிருந்தனர். நான் போராளிகளிடம் பேசினேன். அவர்கள் மகிழ்ச்சியுடனும், கலக்கமின்றியும் தாங்கள் விடுவிக்கப்பட்டு விடுவோம் என்ற முழு நம்பிக்கையுடனும் இருந்தார்கள்.

குமரப்பாவும், புலேந்திரனும் அதற்குச் சமீபத்தில்தான் காதல் திருமணம் செய்துகொண்டவர்கள். அவர்கள் தங்கள் மனைவியருக்கு, ‘கவலைப்பட வேண்டாம். விரைவில் வந்துவிடுவோம்’ என்கிற தகவலை என் மூலம்தான் சொல்லியனுப் பினார்கள். ஆனால், மறுநாளே நிலைமை மோசமானது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் அதுலத் முதலி, போராளிகளை கொழும்புவுக்குக் கொண்டுவந்து விசாரணைக்கு உட்படுத்த ரகசியத் திட்டமிட்டிருப்பதாக, இந்திய ராணுவ அதி காரிகள் என்னிடம் தெரிவித்தனர்.

நான் மறுபடியும் போராளிகளைச் சந்தித்தேன். அப்போது அவர்கள், தலைவர் பிரபாகரனுக்கு ஒரு ரகசிய கடிதத்தை என்னிடம் தந்து அனுப்பினர். நான் அந்தக் கடிதத்தை அன்றிரவே தலைவரிடம் சேர்த்தேன். இயக்க மரபுப்படி, எதிரிகளிடம் சிக்காமல் வீர மரணம் அடைய ஏதுவாக, தங்களுக்கு சயனைட் குப்பிகளை வழங்கக் கோரி எழுதிய கடிதம் அது. அதைப் படித்ததும் பிரபாகரனின் கண்கள் கலங்கின. உதடுகளைக் கடித்தபடி சற்று நேரம் யோசித்தவர், இந்திய அரசுடன் மேலும் பேசி, உடனடியாகப் போராளிகளை மீட்கும்படி சொன்னார். நான் மீண்டும் முயன்றேன். ஆனால், என் முயற்சி எதுவும் பலன் அளிக்கவில்லை. இந்தியத் தூதரும் தன்னால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு நிலைமை ஆபத்தாகிவிட்ட தாகத் தெரிவித்தார்.

மறுநாள், ஒரு விசேட ராணுவ விமானத்தை அதுலத் முதலி, பலாலிக்கு அனுப்பிவைத் துள்ளார் என்றும், அன்று மாலை ஐந்து மணிக்கு எமது போராளிகள் பலவந்தமாக விமானத்தில் ஏற்றப்படுவார்கள் என்றும் இந்தியத் தூதர் என்னிடம் கூறினார்.

நான் உடனடியாக விரைந்து சென்று, பிரபாகரனிடம் தகவலைத் தெரிவித்தேன். துயரமும், கவலையும், கோபமும், விரக்தியுமாக பல்வேறு உணர்வலைகள் கலந்ததால், பிரபாகரனின் முகம் விகாரமாக மாறியது. தனது மெய்ப் பாதுகாவலர்களான புலி வீரர்களை அழைத்து, அவர்களது கழுத்து களில் தொங்கிய சயனைட் விஷக் குப்பிகளைச் சேர்த் தெடுத்து, என் கழுத் திலும், மாத்தையாவின் கழுத்திலும் மாலையாக அணிவித்தார். எப்படியாவது அந்தக் குப்பிகளை எமது போராளிகளிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவும் பிறப் பிக்கப்பட்டது.

அன்று மதியம் உணவுப் பொதிகளுடன் பலாலி தளம் சென்று, எமது போராளிகளுடன் நிகழ்த்திய இறுதிச் சந்திப்பின்போது தலைவரின் வேண்டு கோளை நான் நிறைவு செய்தேன். எதிரிகளிடம் சிக்கிச் சாவதைவிட, தங்களின் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள, அந்தப் பதினைந்து போராளிகளும் சயனைட் குப்பியைக் கடித்தார்கள். சிங்கள ராணுவத்தார் துப்பாக்கி பேனட் டாலும், லத்தியாலும் அவர்களின் தொண்டைக் குழிக்குள் குத்தி, விஷம் இதயத்தில் பாய்வதைத் தடுக்க முயன்றபோதும், எமது மிக முக்கியமான பத்து வேங்கைகள் அந்த இடத்திலேயே வீர மரணம் எய்தினர். ஐந்து பேர் மட்டும் பிழைக்கவைக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராட்ட லட்சியத்துக்காக நான் பட்ட அனுபவங்களில், இதுவே எனது ஆன்மாவை உலுக்கிய மிக வேதனையான சம்பவமாகும்!””

சக்தி ஊடகத்திற்கான நேர்காணல் தொகுப்பு

திசெம்பர் 13, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், வீரவணக்கம் | , , , , , | எல்லாக் காட்டிலேயும் சிங்கம்தான் ராஜா, எங்கள் காட்டில் புலிதான் ராஜா ! #தேசத்தின்குரல் #அன்ரன்பாலசிங்கம் #ஈழமறவர் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #AntonBalasingam #Tamil #Eelam #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

திமுகவை ஆதரித்ததே ஈழ போராட்டத்தை காப்பாற்றத்தான் #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte


திமுக, ஈழ போரில் என்ன செய்திருக்க வேண்டும்?” – ஜெகத் கஸ்பர்

திசெம்பர் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், சுத்துமாத்துக்கள், தமிழர், பிரபாகரன் | , , , , , , | திமுகவை ஆதரித்ததே ஈழ போராட்டத்தை காப்பாற்றத்தான் #ஜெகத்கஸ்பர் #JegathGaspar #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #genocide #Tamil #Eelam #TamilGenocide #Mullivaikkal #ltte அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நாட்டுப்பற்றாளர் நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவு நாள் ! # நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam

நாட்டுப்பற்றாளர். நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவுநாள் 04 .12.2020ம்.திகதி 32ம் ஆண்டு நினைவுநாள்

ஓடையிலே எம் சாம்பல்

கரையும் போது

ஒண்டமிழே சலசலத்து

ஓடவேண்டும்

பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போது பைந்தமிழின் ஓசையை நான் கேட்க வேண்டும்!

இது பாவேந்தர் பாரதிதாசன் எழுச்சிக்கவிதை வரிகள்….

இது சிவம் மாஸ்ரருக்கு மிகப்பிடித்த வரிகளும் கூட….

சிவம் மாஸ்ரர் பெயரைச் சொல்லும்போதே, தமிழ் என்று விரியும் நினைவு காங்கேசன்துறை ஊரவர்க்கு

மனதில் தோன்றும் உருவம்!

இளம்வயதில் இருந்தே தந்தை குஞ்சன் நாகமுத்துவால், தமிழ் உணர்வும் ஊட்டமாகி வளர்ந்தது!

இவர் உணர்ச்சிமிக்க மேடைப்பேச்சாளனாக முதிர்ந்த வேளை அனைத்துக் கூட்டங்களிலும் அரங்கம் அதிரும் வண்ணம் இவரது பேச்சு அமைந்திருக்கும்.

இதேவேளை ஊர்நண்பர்களுடன் இணைந்து இளந்தமிழ் மன்றம் எனும் கலை மற்றும் விளையாட்டுடனான கழகத்தை உருவாக்கும்போது, மாம்பிராய் காந்தி விளையாட்டுக்கழக இளைஞர்களும் இணைந்து

நாடகம், கவியரங்கம், வழக்குரை மன்றம், எனத் தனியாகவும், ஆண்டுவிழாக்கள், நாடகப்போட்டிகள் என்ற முத்தமிழ் ஊரில் ஒவ்வோர் ஆண்டும் களைகட்டும்! இவற்றுள் எல்லாம் சிவம் மாஸ்ரரின் அலவாங்குக் குழிவெட்டி கப்பு நடுவதில் இருந்து, அரங்கு அலங்கார மஞ்சள், சிவப்புக் கீலமாக ஆடும் வெள்ளைத்தாளை வெட்டிக் கோதுமைமாவில் கிண்டிய பசைதடவி நைலோன் நூலில் ஒட்டுவது ஈறாக மேடையில் முழங்கி, நாடகத்தில் நடித்து,கவிதைபாடி,

” குற்றக்கூண்டில் பாரதி தாசன்” முன்னாள் கல்வி அதிகாரி,அதிபர், தமிழ்அறிஞர், ஆன்மீகவாதிகள் தமிழ்ப்பற்றாளர் மதிப்பிற்குரிய

திரு வேலாயுதம் ஆசிரியர் நீதிபதியாக வீற்றிருக்க,சூடுமறக்க வெடிக்கும் தமிழ் வாதாட்டுமொழி சிவம்மாஸ்ரரை மேடையில் ஓர் சிவனாகவே பார்க்கலாம்! அழகும் வேகமுமாக அடுத்தடுத்து அள்ளிவரும் தமிழ்…

இப்படியே ஆண்டுகள் நகர, தமிழினவிடுதலை மென்முறைப்போராட்டங்ககள் பலவற்றிலும், தமிழாராட்சி மாநாட்டிலும் கலந்து நின்ற வாத்தியார்……

காலத்தின் தேவை, இன ஒடுக்குமுறையின் சிங்கள வன்முறையின் உச்சக் கோரதாண்டவம், எதிர்வினையாகத் தமிழ் இளைஞர்களின் கரங்களில் கருவிகளைத் திணித்தது காலம். காலப்பிரசவமாய், ஈழத்தமிழர்களின் பாரம்பரிய போர்முகம் பிரபாகரன் எனும் தமிழ் எழுச்சி வடிவமாகதோற்றமுற, இயல்பாகவே சுதந்திரத் தாகம் கொண்ட சிவம் மாஸ்ரரும், காலத்தின் கரிசனையைத் தானும் உணர, பூம்புகார் வீடு ஓர் புலிகள் சரணாலயமானது! இதற்கு முன்னரான காலத்திலும், பலபோரளிகள் அந்தவீட்டீன் அன்னம் சுவைக்காமல் சென்றதில்லை!

இறுதியாக அவர் தலையையும், மார்பையும் துளைத்த துப்பாக்கியின் சொந்தக்காரர்களான செந்தோழர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என

அனைவருக்கும் அடைக்கலமும், ஆதரவும் கொடுத்த அந்த மனிதம் மிகு மனிதன், தமிழ்ப்பற்றாளன், மக்கள் நேய ஊரவன்,

இருண்டகாலமாக எமது மண்ணில் இறங்கிய இந்திய நஞ்சுக்காற்றால் மூச்சுத்திணறவைத்தவேளை

அமைதி முகம் கிழிய, ஆயுத அரக்கரானபோது, மீண்டும் மாஸ்ரர் வழமைபோல விடுதலைக்குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழியானார்.

யாழ்மாவட்ட அரசியற் துறைப்பொறுப்பாளராக இருந்த தியாக தீபம் லெப்.கேணல்திலீபன் அவர்களுக்குஅடுத்ததாகப் பொறுப்பேற்ற

பிரசாத் அவர்களின் அணியினது பாதுகாப்பான தலைமறைவு செயற்பாட்டுக்கு உறுதுணையாக நின்றார்!

அத்தோடு குடாநாட்டை விட்டு வெளியேறிய பல போராளிக்குழுவின் இளைப்பாறும் இடைத்தங்கல் இல்லமாக, பல பற்றைக் காடுகளில், அவர்கள் காத்திருந்தார்கள்! மாஸ்ரரின் உணவும், மருந்தும் வரும் என்று!

அத்தகைய இருத்தலில் ஒன்றின் காட்டிக்கொடுப்புச் சுற்றிவளைப்பில் மாஸ்ரரும், திலகனும் இன்னுமொரு நண்பரும் இந்திய இராணுவத்தால் கைதைசெய்யப்பட்டு, பண்டத்தரிப்புச் சந்தி முகாமில் கடுமையாகத் தாக்கி விசாரணை செய்தபின்,காங்கேசன் துறை முகாமிற்கு மாற்றப்பட்டபின், இந்திய இராணுவத்தால் செல்வாக்கு மிக்க இரட்டைமுக காங்கேசன் பிரமுகர்கள், சில அரச நண்பர்கள் அதற்கும் மேலான நடேஸ்வராக்கல்லூரியின் அன்றைய அதிபர், மாஸ்ரரில் அன்பும், மரியாதையும் கொண்ட மாணவர்கள், சக ஆசிரிய நண்பர்கள் ஆகியோரின் முயற்சியும்,

இளந்தமிழ் மன்ற நண்பர்கள், தெல்லிப்பளை பநோகூ சங்கத்தலைவர் சிவமகாராஜா,

மாஸ்ரர் பண்டத்தரிப்பு முகாமில் தான் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து சொன்ன, அவரது ஒன்றைவிட்ட பிராம்பற்று அண்ணன் உட்பட பலரின் அயாராமுயற்சியால் மாஸ்ரர் மறுபடி விடுவிக்கப்பட்டார். அவர் நண்பர்களோடு!

பின்பு மறுபடியும் விடுதலைக்குரல் ஒலிக்கத்தொடங்க அதனை ஒடுக்க நினைத்த இந்திய உளவுத்துறையும், அதன் நிறைவேற்றுக்குழுவான, ஈபிஆர்எல்எவ் இன் அடியாட்களும் தமது எண்ணத்தை அவகாசமின்றி 1988 டிசம்பர் 4 ம் திகதி நிறைவேற்றின!

ஒரு ஆயுதம் ஏந்தாத ஆசிரியனை ஒழிக்க பல ஆயுதம் தாங்கிய முழுமையான கொலைகாரர்கள்!

அந்த ஜீவன், கல்லூரிவீதி இரண்டாம் குறுக்குத் தெரு வீதி சந்தியில்,தலையுலும் மார்பிலும் குண்டேந்தியபடி,

தான் பிறந்த மண்ணில் தன் குருதி வழிய தான் உயிரிலும் மேலாய் நேசித்த தாயகவிடுதலைக்காக தன்னுயிரீந்தார்.இதே சந்தியில், இந்திய இராணுவம் முன்பு தன் உரிமை முழக்கம் இட்டதும்,இதே சந்தியிலேயே ஈரோஸ் அமைப்பின் போராளிகள் நால்வர் வீரச்சாவடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்க சிவந்த மண் சிவம் மாஸ்ரர் வீழ்ந்த மண்!  நாட்டுப்பற்றாளரின் நினைவை நெஞ்சில் நிறுத்தி அவருக்கு எமது அக நினைவு வணக்கம்

திசெம்பர் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், தமிழர், நாட்டுப்பற்றாளர், வீரவணக்கம் | , , , , , | நாட்டுப்பற்றாளர் நாகமுத்து கருணானந்தசிவம் ஆசிரியர் அவர்களின் நினைவு நாள் ! # நாட்டுப்பற்றாளர் #வீரவணக்கம் #ஈழமறவர் #ஈழம் #மாவீரர்கள் #விடுதலைப்புலிகள் #இனப்படுகொலை #ltte #Maaveerar #Tamil #Eelam அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

2009 போரை 2002 இல் முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன் ! #காணொளி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #prabhakaran

இங்கே ஒரு நெருடலான ஒரு விடயம் 2002 இல் நடைபெற்ற செவ்விகளை 18 வருடங்கள் கழித்து பகிரங்கப்படுத்துவது தான் ???????

#kolakalasrinivasan


தேசிய தலைவரை சந்தித்த வேளையில் – அப்துல் ஜப்பார்



அப்துல் ஜப்பார் | #Prabhakaran -ஐ ஈர்த்த ஊடகவியலாளரின் குரல்

‘நீங்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா என்ன?”

இப்படியொரு துணிச்சலான கேள்வியை விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரனிடம் கேட்க முடிகிற ஒரு காட்சியை கற்பனை செய்து பார்த்தாலே சற்று திகைப்பாகத்தான் இருக்கிறது இல்லையா?

இதைக் கேட்டவர் பிரபல கிரிக்கெட் வர்ணணையாளரும், தமிழறிஞரும், எழுத்தாளருமான அப்துல் ஜப்பார்.

ஏப்ரல் 10, 2002 அன்று சர்வதேச ஊடகங்களின் பிரதிநிதிகள் பெரும்பாலும் கிளிநோச்சியில் இருந்தார்கள். ஒட்டுமொத்த ஊடக உலகின் கண்களும் அன்று அந்த திசை நோக்கிதான் இருந்தன.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் சர்வதேச ஊடவியலாளர் மாநாட்டினை அன்று ஏற்பாடு செய்திருந்தார். ‘அது ஒரு துன்பியல் சம்பவம்’ என்று ராஜீவ்காந்தி படுகொலையைப் பற்றி முதன்முறையாக புலிகள் தரப்பிலிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது அன்றுதான்.

இந்த ஊடகவியலாளர்கள் மாநாட்டிற்குத்தான் அப்துல் ஜப்பார் சென்றிருந்தார். மாநாட்டின் நிறைவில் எதிர்பாராததொரு ஆச்சரியமாக பிரபாகரனை சந்திக்கும் வாய்ப்பு, அப்துல் ஜப்பாருக்கு கிடைத்தது.

இவரின் வானொலி நிகழ்ச்சிகள் அங்கு பிரபலம் என்பதால் பிரபாகரனே இவரைச் சந்திக்க விரும்புகிறார். அந்த உரையாடலின் இடையில்தான் ஒரு தருணத்தில் மேற்குறிப்பிட்ட கேள்வியை ஜப்பார் கேட்கிறார்.

***
இந்த மாநாட்டிற்கு சென்ற அப்துல் ஜப்பாரின் பயண அனுபவங்களும் பிரபாகரனுடனான சந்திப்பு விவரங்களும் தொகுக்கப்பட்டு ஒரு சிறிய நூலாக வெளிவந்திருக்கிறது.

‘கண்டேன் சீதையை’ என்று அனுமன் சொல்வது போல ‘அழைத்தார் பிரபாகரன்’ என்பது நூலின் அழகான தலைப்பு.

எதிர்பாராமல் அமைந்த இந்த பயண நிகழ்வு, அதில் ஏற்பட்ட நடைமுறைச் சிரமங்கள், அதைத் தாண்டி வந்த சாதனைகள் என்று தன் பயணம் தொடர்பான ஒவ்வொரு நுண்தகவலையும் எளிமையான, அழகு தமிழில் பதிவு செய்திருக்கிறார். அவருடனேயே நாமும் சென்று வந்த உணர்வு இந்நூலின் மூலம் கிடைக்கிறது.

போரினால் அழிந்த கட்டிடங்கள், புதைக்கப்பட்டிருக்கும் கண்ணி வெடிகள், எல்லா ஏற்பாடுகளையும் நேர்த்தியாகவும் பாதுகாப்பாகவும் செய்யும் புலிகளின் ஒழுங்கு, நிர்வாகத்திறமை, அவர்களின் தியாகவுணர்வு உள்ளிட்ட பல தகவல்கள் இந்த நூலில் சுவாரசியமாக வெளிப்படுகின்றன.

#Tamilniram #HBDLeaderPrabhakaran66 #JegathGaspar

என் உண்மையான எதிரிகள் இவர்கள்தான்- கோபப்பட்ட மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்



நாடாளுமன்றை அதிரவைத்த கூட்டமைப்பு உறுப்பினரின் பேச்சு!!

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களை சிறிலங்கா காவல்துறை கைசெய்வது என்பது அரசாங்கத்தின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயல் என்று தெரிவித்திருந்தார் த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்.

நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவதிற்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையையும் அவர் விடுத்திருந்தார்

ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் அரசாங்கத்தை சரமாறியாக குற்றம்சுமத்தி சாணக்கியன் நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி:

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படத்தை பகிர தடையா? – ஃபேஸ்புக் பதில்
பிபிசி தமிழ்

திசெம்பர் 5, 2020 Posted by | இனப் படுகொலை, ஈழமறவர், ஈழம், காணொளிகள், தமிழர், பிரபாகரன் | , , , , , | 2009 போரை 2002 இல் முன்கூட்டியே தெரிவித்தார் பிரபாகரன் ! #காணொளி #ஈழமறவர் #பிரபாகரன் #ஈழம் #தமிழர் #விடுதலைப்புலிகள் #Prabhakaran #Tamil #Eelam #ltte #prabhakaran அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது