அழியாச்சுடர்கள்

சீமானின் பேச்சு ஒரு பல்கலைக்கழகம் !

சீமானின் பேச்சு, 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்!

சீமான் மீது வழக்கு….
அது முடிந்து போய்விடும்…
ஒரு வேளை தண்டனை எதாவது கிடைத்தால்
அதுவும் தீர்ந்து போய்விடும்….
சீமான் மரணத்தோடு
அவர் வாழ்வும் முடிந்து போய்விடும்!

ஆனால்,

அறிவு மறுக்கப்பட்டு, பாமரனாய், அடிமைகளாய், துன்பச்சேற்றில் உழல்கிற மக்கள் தொகுதியை நோக்கி விடுதலைக்கான பாதையை சுட்டிக்காட்டிப் பேசுகிற சமகால கலகக்காரன் ஒருவனின் சீற்றமிகு போர்ப்பரணியாய் ஒலித்திருக்கிற அந்தப் பேச்சு லட்சம் ஆண்டுகள் ஆனாலும் வாழும்….

இன்னும் 100 தலைமுறை கடந்து பிறக்கும் தமிழ் பிள்ளைக்கும் தான் யார் என்பதைச் சொல்லும்!

தன் முன்னோர்கள் எப்படியெல்லாம் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள்…. அவர்களை அடிமை செய்தவன் யார்….
அவர்களை அடிமை செய்ய அவன் பயன்படுத்திய கருவி எது என்பதையெல்லாம் ஒரு பல்கலைக்கழகம் போல் நின்று இந்தப் பேச்சு சொல்லிக்கொடுக்கும்!

ஆயிரம் வழக்குகள் போடலாம்…. மேடைகள் போட்டு ஒப்பாரி வைக்கலாம்…. உங்கள் அதிகார பலம் கொண்டு அவனைக் கொன்று கூட போடலாம்…. ஆனால், அந்தக் கலகக்காரனின் நேர்மையான சிந்தனையிலிருந்து உதித்த கேள்விகளுக்கு ஒருகாலும் உங்களால் விடை சொல்ல முடியாது!

– கல்யாண சுந்தரம்

**
சீமான் யார்?
அவன் என்ன பேசுகிறான்?
என்ன என்ன செய்ய வேண்டும் என சொல்கிறான்?.

மரத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

மழையின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!

ஆற்று மணலின் அவசியத்தைப் பற்றி பேசுகிறான்!

நீர் மேலாண்மையை பற்றி பேசுகிறான்!

தூய காற்றின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

விவசாயத்தின் அவசியத்தை பற்றி பேசுகிறான்!

எதிர்கால சந்ததியை பற்றி அக்கறை கொள்கிறான்!

நம் தலைமுறையோடு அழிந்துவிடுவது அல்ல இந்த பூமி என்கிறான்!

வெறும் ஆட்சி மாற்றத்தை மட்டும் மற்ற கட்சிகள் முன்னிறுத்தும் நிலையில் அடிப்படை மாற்றம் வேண்டும் என்கிறான்!

நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு.

■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும்.

■ அனைவருக்கும் பொதுவான கட்டணமில்லா தமிழ் வழிக்கல்வி.

■ அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும்.

■ ஆடுமாடு மேய்த்தல் மற்றும் விவசாயம் அரசு பணி… ஊதியம் குறைந்த பட்சம் 30000.

■ 4 மணி நேர செய்வழிக்கல்வி.. 4 மணி நேரம் தமிழரின் போர் வீர விளையாட்டு பயிற்சி.

■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு.

■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி.

■ ஒவ்வொரு குடும்பங்களிலும் நாட்டு மாடு வளர்க்க ஆணை.

■ விவசாயம் சார்ந்த மரபு வழி தொழில்களுக்கு மட்டுமே அனுமதி.

■ பெருவணிக நிறுவனங்களுக்கு தடை.

■ தமிழில் படித்தால் மட்டுமே அரசு பணி.

■ அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும்.

■ 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும்.

■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும்.

■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும்.

■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும்.

■ தேசிய விளையாட்டாக சல்லிக்கட்டு அறிவிக்கப்படும்.

■ கோவில்களில் சமசுகிருதம் படித்தால் தேசத்துரோகம்.

■ அந்நியர்கள் தொழில் தொடங்க தடை.

■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும்.

■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும்.

■ தண்ணீர் விற்கத்தடை.

■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை.

■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும்.

■ கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும்.

■ நகர் மயமாக்கல் தடுக்கப்படும்.

■ அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும்.

■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது.

■ அணு உலைகள் முற்றாக மூடப்படும்.

■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும்.

■ வரதட்சணைக்கு தடை.

■ பூரண மதுவிலக்கு அமல்.

■ மீன் பிடித்தொழில் பாதுகாப்பு அமைச்சு அமைத்தல்.

■ எல்லை பாதுகாப்பு படை உருவாக்கம்.

■ மீனவர் பாதுகாப்பு படை.

■ மேலும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதியிலும் முப்பாட்டன் முருகன் கோவில் அமைக்கப்படும்.

■ திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்.

■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும்.

■ ஏறுதழுவுதல்/தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) தேசியத்திருவிழாவாக அறிவித்து,7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும்.

■ தைபூசத் திருவிழாவுக்கு அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படும்.

■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 30000 ருபாய் வழங்கப்படும்.

■ கைய்யூட்டு வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

■ கைய்யூட்டு வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும்.

■ பிற மாநிலங்களிடம் இழந்த பகுதிகளை மீட்க தனி அமைச்சகம் அமைக்கப்படும்.

💪சிறந்த தமிழகத்தை உருவாக்க நாம் தமிழர் கட்சியை ஆதரிப்போம்.

இந்த அறிக்கையில் உள்ள அறிவிப்புகள் அனைத்தும் நிறைவேற்ற முடிந்தவைதான் முடியாதது ஒன்றும் இல்லை.

-படித்ததில் பிடித்தது.

ஜனவரி 30, 2017 - Posted by | ஈழம், தமிழர் | ,

Sorry, the comment form is closed at this time.